Nojoto: Largest Storytelling Platform

அத்யாயம் 1 ஒரு காலுடைந்த நாற்காலி     டக், டக் என்

அத்யாயம் 1
ஒரு காலுடைந்த நாற்காலி     டக், டக் என்ற சத்தம் வாசல் பக்கம் வந்ததது யாரோ கதவை தட்டுகிற சத்தம்
ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை அதனால் டக் டக் என்ற ஒலி தட தட தட என்று கனத்தது அப்போதும் தாழிட்ட கதவுகளை பிரிக்க எந்த கைகளும் உள்ளிருந்து முயற்சிக்கவில்லை என்பதால்.. 
  இம்முறை காலிங் பெல் அடிக்கப்பட்டது முதலில் மெதுவாக அடித்த காலிங் பெல்..
வெளியே நிற்பவரின் கோபம் போல் மெதுவாக வலுக்க தொடங்கியது.. 
  ஒருவழியாக ஒரு சிறுமி வேகமாக ஓடி வந்து கதவு திறந்தாள். வெளியில் பார்த்தால் அவளின் தந்தை இம்தியாஸ். "அம்மாவுக்கு முடில நீ தான பாப்பா வீட்டை பாத்துக்கணும் தானே விட்டிட்டு சொல்லிட்டு போனே இப்படி கதவு கூட திறக்கமா இருக்கா" என்று வீட்டினுள் வந்து கொண்டே இருக்கும் போது அதட்டினான்..
    உண்மையில் அவன் அதட்டவில்லை "ஹே.. என்ன" என்று கனத்த குரலில் சொன்னால் கூட அதட்டுவது போல் தெரியும் 5 வயது தான் அந்த சிறுமிக்கு... அந்த சிறுமியின் பெயர் கதீஜா..!
   "டிவி பாத்தியா நீ" என்று டிவியில் ஏதோ ஒரு ஸ்கூபா டைவிங் பற்றிய நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்ததை பார்த்து இம்தியாஸ் கேட்க..
     கதீஜா மிரண்டு போய், "வாப்பா..! கடலில் என்ன இருக்கு காமிச்சாங்கப்பா" அதுதான் பார்த்துகிட்டு இருந்தேன் என்று மழலை மாறாது தன்னுடைய அழகான குரலில் சொன்னாள்..
அத்யாயம் 1
ஒரு காலுடைந்த நாற்காலி     டக், டக் என்ற சத்தம் வாசல் பக்கம் வந்ததது யாரோ கதவை தட்டுகிற சத்தம்
ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை அதனால் டக் டக் என்ற ஒலி தட தட தட என்று கனத்தது அப்போதும் தாழிட்ட கதவுகளை பிரிக்க எந்த கைகளும் உள்ளிருந்து முயற்சிக்கவில்லை என்பதால்.. 
  இம்முறை காலிங் பெல் அடிக்கப்பட்டது முதலில் மெதுவாக அடித்த காலிங் பெல்..
வெளியே நிற்பவரின் கோபம் போல் மெதுவாக வலுக்க தொடங்கியது.. 
  ஒருவழியாக ஒரு சிறுமி வேகமாக ஓடி வந்து கதவு திறந்தாள். வெளியில் பார்த்தால் அவளின் தந்தை இம்தியாஸ். "அம்மாவுக்கு முடில நீ தான பாப்பா வீட்டை பாத்துக்கணும் தானே விட்டிட்டு சொல்லிட்டு போனே இப்படி கதவு கூட திறக்கமா இருக்கா" என்று வீட்டினுள் வந்து கொண்டே இருக்கும் போது அதட்டினான்..
    உண்மையில் அவன் அதட்டவில்லை "ஹே.. என்ன" என்று கனத்த குரலில் சொன்னால் கூட அதட்டுவது போல் தெரியும் 5 வயது தான் அந்த சிறுமிக்கு... அந்த சிறுமியின் பெயர் கதீஜா..!
   "டிவி பாத்தியா நீ" என்று டிவியில் ஏதோ ஒரு ஸ்கூபா டைவிங் பற்றிய நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்ததை பார்த்து இம்தியாஸ் கேட்க..
     கதீஜா மிரண்டு போய், "வாப்பா..! கடலில் என்ன இருக்கு காமிச்சாங்கப்பா" அதுதான் பார்த்துகிட்டு இருந்தேன் என்று மழலை மாறாது தன்னுடைய அழகான குரலில் சொன்னாள்..