தேவகியின் புதல்வனாய் மகாவிஷ்ணுவின் அவதாரமாய் மதுராவில் அவதரித்தாய் யசோதையின் வளர்ப்பு மகனாய் கோகுலத்தின் கோபாலனாய் பிருந்தாவனத்தின் செல்லமாய் வெண்ணெய் விரும்பியாய் யது குல தலைவனாய் துவாரபாவின் அடையாளமாய் அர்ஜுனனின் தேரோட்டியாய் அவனது நண்பனாய் கீதையின் நாயகனாய் நீலநிற கண்ணனாய் ருக்குமணியின் கணவனாய் ராதையின் காதலனாய் கோபியரின் ரமணனாய் மங்கையரின் மணாளனாய் லீலைகளின் நாயகனாய் எங்கள் உள்ளத்தை மட்டும் நீ வெல்லவில்லை..... எங்கள் உயிரில் கலந்து உணர்வுகளை வென்றவன்!!!!! Happy birthday Krishna