காலாற நடந்தாலும் கப்பல் ஏறி கடந்தாலும் கடந்து வந்த பாதையினை கண்டும், காணாமல் நிமிர்ந்து நின்றதும் கேலி செய்ய கூட்டம் தேடிவரும்! காணாது போ!! கலங்காமல் களத்தில் இரு!!! முட்பாதையில் நீ முன்னேறி செல்கையில் முடங்க வைக்கும் மொழிகள் உன்னை முந்திச் செல்லும்! முள் என அதை மிதித்து போ!! முயற்சியுடன் களத்தில் இரு.!!! வீணாக போனாய் என வீணர்கள் வாய்மொழி வீரியத்துடன் வதைக்கும்! விட்டுச் செல்!! விதையாய் விழுந்தோம் என விருட்சமாய் வளர்வோம் என விலகாமல் களத்தில் இரு!!! விடியலில் உன் வெற்றி விண்ணைத் தொடும்!!!! #RenuWrites #களத்தில்_இரு