இருவரும் மௌனமாக பார்த்து கொண்டோம்..! அவள் குறுஞ்செய்தி அனுப்புவாள் என்று- நானும் நான் குறுஞ்செய்தி அனுப்புவேன் என்று- அவளும் இருவரும் மௌனமாக பார்த்து கொண்டோம்..! ஆண்மை தவற கூடாது என்று- நானும் பெண்மை பேண வேண்டும் என்று- அவளும் இருவரும் மௌனமாக பார்த்து கொண்டோம்...! காதல் மிகுதி பெறட்டும் என்று- நானும் தக்க தருணம் வரட்டும் என்று- அவளும் இருவரும் மௌனமாக பார்த்து கொண்டோம்..! இந்த மௌனம் எப்போது தீரும் என்று- நானும் இதற்கு அவனே தீர்வு என்று- அவளும் இருவரும் மௌனமாக பார்த்து கொண்டோம்..! என் ஆண்மைக்கு அசரா பெண்ணென்று- நானும் பெண்மைக்கு தளரா ஆண் என்று- அவளும் இறுதியில் சலனத்தில் பேசிக் கொண்டோம்..! இன்று உனக்கு என்ன ஆனதென்று- நானும் இது நான் கேட்க வேண்டிய கேள்வியென்று- அவளும் #காதலியம் #teakadaikavithaigal