Nojoto: Largest Storytelling Platform

இருவரும் மௌனமாக பார்த்து கொண்டோம்..! அவள் குறுஞ்செ

இருவரும் மௌனமாக பார்த்து கொண்டோம்..!
அவள் குறுஞ்செய்தி அனுப்புவாள் என்று- நானும்
நான் குறுஞ்செய்தி அனுப்புவேன் என்று- அவளும்

இருவரும் மௌனமாக பார்த்து கொண்டோம்..!
ஆண்மை தவற கூடாது என்று- நானும்
பெண்மை பேண வேண்டும் என்று- அவளும்

இருவரும் மௌனமாக பார்த்து கொண்டோம்...!
காதல் மிகுதி பெறட்டும் என்று- நானும்
தக்க தருணம் வரட்டும் என்று- அவளும்

இருவரும் மௌனமாக பார்த்து கொண்டோம்..!
இந்த மௌனம் எப்போது தீரும் என்று- நானும்
இதற்கு அவனே தீர்வு என்று- அவளும்

இருவரும் மௌனமாக பார்த்து கொண்டோம்..!
என் ஆண்மைக்கு அசரா பெண்ணென்று- நானும்
பெண்மைக்கு தளரா ஆண் என்று- அவளும்

இறுதியில் சலனத்தில் பேசிக் கொண்டோம்..!
இன்று உனக்கு என்ன ஆனதென்று- நானும்
இது நான் கேட்க வேண்டிய கேள்வியென்று- அவளும் #காதலியம் #teakadaikavithaigal
இருவரும் மௌனமாக பார்த்து கொண்டோம்..!
அவள் குறுஞ்செய்தி அனுப்புவாள் என்று- நானும்
நான் குறுஞ்செய்தி அனுப்புவேன் என்று- அவளும்

இருவரும் மௌனமாக பார்த்து கொண்டோம்..!
ஆண்மை தவற கூடாது என்று- நானும்
பெண்மை பேண வேண்டும் என்று- அவளும்

இருவரும் மௌனமாக பார்த்து கொண்டோம்...!
காதல் மிகுதி பெறட்டும் என்று- நானும்
தக்க தருணம் வரட்டும் என்று- அவளும்

இருவரும் மௌனமாக பார்த்து கொண்டோம்..!
இந்த மௌனம் எப்போது தீரும் என்று- நானும்
இதற்கு அவனே தீர்வு என்று- அவளும்

இருவரும் மௌனமாக பார்த்து கொண்டோம்..!
என் ஆண்மைக்கு அசரா பெண்ணென்று- நானும்
பெண்மைக்கு தளரா ஆண் என்று- அவளும்

இறுதியில் சலனத்தில் பேசிக் கொண்டோம்..!
இன்று உனக்கு என்ன ஆனதென்று- நானும்
இது நான் கேட்க வேண்டிய கேள்வியென்று- அவளும் #காதலியம் #teakadaikavithaigal