பகல் பதவி விலகி இரவு ராஜ்ஜியம் நடந்து வேளை இரவின் மௌனத்தில் ஊர் அடங்கிகிடக்கிறது உள்ளம் உறங்காமல் கிடக்கிறது கயிற்று கட்டிலில் படுத்திருந்தவன் காதோரம் காற்று விசு விசு என மாட்டின் கழுத்துமணி ஓசை சேர்த்தது வேகமெடுத்த காற்றால் பக் பக் என பஞ்சார கோழிகள் மே மே என பட்டி ஆடுகள் தூரத்து கிணத்து மோட்டார் கிரீச் சத்தம் அனைத்தையும் அடக்கி ஆட்சி செய்துக்கொண்டிருந்தது இரவு எங்கும் நிசப்தம். நேற்று நான் ரசித்துக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் எங்கே குழப்பத்திற்கு பின் வரும் தெளிவு போல இருந்தது வானம் அதை பார்த்துக்கற்றுக்கொண்டிருந்தது மனம் மழைக்கு முன் வரும் புயல் பற்றிய குழப்பமோ மழைக்கு பின் வரும் தெளிவான வானவில்லோ இல்லை வாழ்க்கை நாம் ரசிக்க வேண்டியது என்னவோ மழையைதான் இந்த பாடம் இரவின் மௌனத்திலிருந்தா இல்லை அதனால் முழித்து கொண்ட மனதின் ஆழத்திலிருந்தா? (READ CAPTION FOR BETTER VIEW) #கவிதைகளம் பகல் பதவி விலகி இரவு ராஜ்ஜியம் நடந்து வேளை இரவின் மௌனத்தில் ஊர் அடங்கிகிடக்கிறது உள்ளம் உறங்காமல் கிடக்கிறது . கயிற்று கட்டிலில் படுத்திருந்தவன் காதோரம் காற்று விசு விசு என மாட்டின் கழுத்துமணி ஓசை சேர்த்தது